25.7.11

தமிழ் மொழி

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
  இனிதாவதெங்கும் காணோம்"

   இது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வைரவரிகள்.

          இது தமிழ்மொழி பற்றி கவிஞர் கருத்து.

      ஆனால் இன்று அனைவரையும் ஆங்கில மோகம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.தாய் மொழிக்கல்வியை அனைவருமே நிராகரித்து வருகின்றனர்.சில வருடங்கள் வரை நகர்ப்புறங்களில் மட்டுமே நிலவிய இந்தக் கொடுமை தற்போது கிராமப்புற மக்களிடமும் வேகமாகப் பரவிவருகிறது.

      இதன் விளைவு என்ன என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லவேண்டும்.தற்போது கிராமப் புறங்களில் இருந்த ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடுவிழாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

     இனிவரும் காலங்களில் தமிழ் மொழி அடியோடு அழிந்துவிடும் என்ற ஐயம் தமிழார்வலர்களிடையே மேலோங்கி வருகிறது.

     நாமும் நம்மால் இயன்றவரை முயன்று தமிழ்மொழியின் பெருமை காப்போம்...