நான் முல்லைப்பெரியாறு அணை உருவாக்கப்பட்டதன் பிண்ணனியை சென்ற இடுகையில் வலையேற்றி இருந்தேன்.அந்த அணை எந்தவொரு உயர்ந்த நோக்கத்துடன் அன்றைய ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது என்பதை என்னால் இயன்றவரைக்கும் சிறப்பாகச் சொல்லியிருந்தேன் என நினைக்கிறேன்.
இந்தப் பதிவில் முல்லைப்பெரியாறு அணையை ஒரு மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சிக்கு இரையாக்கிதன் பிண்ணனியையும்,அதற்கான காரணத்தையும் விரிவாகத் தருகிறேன்.
முல்லைப்பெரியாறு அணியிலிருந்து 50 கி.மீ தொலைவில் கி.பி.1975 ஆம் ஆண்டு கேரள அரசு இடுக்கி அருகில் குறவன்,குறத்தி மலைகளுக்கு இடையில் கேரள மின்வாரியத்திற்காக ஒரு அணையைக்கட்டியது.அந்த அணை கட்டப்பட்டதன் நோக்கம் மின்சாரம் தயாரிப்பதற்காக மட்டுமே.வேறு எந்த விவசாயப்பணிகளுக்காகவும் இல்லை.காரணம் பெரியாறு பாயும் பகுதிகள் அனைத்துமே மலைப்பாங்கான பகுதிகள் தான் இந்த அணையின் நீரால் அங்கு எந்தவொரு விவசாயப்பணிகளும் நடைபெறாது.
அந்த அணையின் மொத்த நீர்வரத்தும் பெரியாற்றையே நம்பி இருந்தது.அணையின் மொத்தக்கொள்ளளவு 70.5 டி.எம்.சி.அந்த அணை கட்டிய காலம் தொட்டு இன்றுவரை அந்த அணை இன்று வரை அதன் மொத்தக் கொள்ளளவை எட்டவேயில்லை.
இந்தப் பதிவில் முல்லைப்பெரியாறு அணையை ஒரு மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சிக்கு இரையாக்கிதன் பிண்ணனியையும்,அதற்கான காரணத்தையும் விரிவாகத் தருகிறேன்.
முல்லைப்பெரியாறு அணியிலிருந்து 50 கி.மீ தொலைவில் கி.பி.1975 ஆம் ஆண்டு கேரள அரசு இடுக்கி அருகில் குறவன்,குறத்தி மலைகளுக்கு இடையில் கேரள மின்வாரியத்திற்காக ஒரு அணையைக்கட்டியது.அந்த அணை கட்டப்பட்டதன் நோக்கம் மின்சாரம் தயாரிப்பதற்காக மட்டுமே.வேறு எந்த விவசாயப்பணிகளுக்காகவும் இல்லை.காரணம் பெரியாறு பாயும் பகுதிகள் அனைத்துமே மலைப்பாங்கான பகுதிகள் தான் இந்த அணையின் நீரால் அங்கு எந்தவொரு விவசாயப்பணிகளும் நடைபெறாது.
அந்த அணையின் மொத்த நீர்வரத்தும் பெரியாற்றையே நம்பி இருந்தது.அணையின் மொத்தக்கொள்ளளவு 70.5 டி.எம்.சி.அந்த அணை கட்டிய காலம் தொட்டு இன்றுவரை அந்த அணை இன்று வரை அதன் மொத்தக் கொள்ளளவை எட்டவேயில்லை.
இடுக்கி அணையின் தோற்றம்
கேரள அரசு இடுக்கி அணையைக்கட்டிய போது மிகப்பெரும் எதிர்பார்ப்போடு கட்டியது.750 மெகாவாட் மின் உற்பத்தியை கணக்கிட்டுத்தான் இந்த அணை கட்டப்பட்டது.நிலைமை இவ்வாறிருக்க அணைக்குப் போதிய நீர்வரத்துயின்மையால் எதிர்பார்த்த மின் உற்பத்தியை எட்ட முடியவில்லை.இந்த நிலையில் கேரள அரசின் பார்வை முல்லைப்பெரியாறு அணை மீது விழுந்தது.
கேரளாவிலிருந்து வெளிவரும் மலையாள மனோரமா எனும் நாளிதழ் 16.10.1979 அன்று முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து என்று ஒரு பொய்யான செய்தியைப் பிரசுரித்தது.அன்று வரை என்ன செய்வது எனத்தெரியாமலிருந்த கேரளா அரசு இந்தச் செய்தியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தொங்க ஆரம்பித்தது.அதுவரை 152 அடி தண்ணீர் தேக்கிவந்த தமிழக அரசுக்கு எதிராக கேரள அரசு அணை ஆபத்தாக இருக்கிறது என்றும்,அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது.மேலும் முல்லைப்பெரியார் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கூறியது.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அணையை பலப்படுத்துமாறும் அதுவரை அணியின் நீர்மட்டத்தை 142 அடி வரை நீர்தேக்கவும் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவையும் அணையின் கீழே வசிக்கும் மக்களின் பாதுகாப்பையும் முன்னிறுத்தி தமிழக அரசு மனப்பூர்வமாக ஏற்றது.
ஒப்பந்த மறுபரிசீலனை விஷயத்தை இரு மாநில முதல்வர்கள் மட்டத்தில் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறும் பரிந்துரைத்தது.
இதன்படி அணையை மூன்று வழிகளில் பலப்படுத்தத்துவங்கியது.
1.அவசர கால நடவடிக்கைகள்:
இதன் படி அணையில் கேபிள் ஆங்கரிங் முறையில் அணையின் தடுப்புச்சுவர்களின் இடையில் துவாரங்கள் அமைக்கப்பட்டு அணையின் மொத்த உயரத்திற்கும் ,நீளத்திற்கும் சிறு சிறு இடைவெளியில் அணையின் அடிப்பகுதியில் உள்ள பாறைகள் வரை கேபிள் ஆங்கரிங் செய்யப்பட்டு அந்தத் துளைகள் அனைத்தும் கான்க்ரீட் கலவைகளால் நிரப்பப்பட்டது.
2.இடைக்கால நடவடிக்கைகள்:
இதன்படி அணையின் தடுப்புச்சுவர்கள் மிகவும் உறுதியான வகையில் கான் க்ரீட் கலவைகளால் அணையின் மொத்த நீளத்திற்கும் கட்டப்பட்டது.அணையின் மேல்பகுதியில் கைபிடிச்சுவர்கள் அமைக்கப்பட்டன.
3.இறுதிக்கட்ட நடவடிக்கைகள் :
இதன்படி பேபி அணையைப் பலப்படுத்துதலும்,நீர் வெளியேற்றும் ஷட்டர்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு அணையின் நீர்வெளியேற்றும் திறன் வினாடிக்கு 1,25,000 கனஅடியாகவும் உயர்த்தப்பட்டது {அதற்கு முன் அணையின் நீர் வெளியேற்றும் திறன் வினாடிக்கு 85,000 கனஅடியாகத் தான் இருந்தது}
என்ற அளவில் அணையைப் பலப்படுத்தியது.
இதற்காகத் தமிழக அரசு ரூ 20 கோடி ஒதுக்கியது.இந்தப்பணிகள் 1981 ஆம் ஆண்டு தொடங்கி 1995 ஆம் ஆண்டுவரை நடைபெற்றது.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அணையை பலப்படுத்துமாறும் அதுவரை அணியின் நீர்மட்டத்தை 142 அடி வரை நீர்தேக்கவும் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவையும் அணையின் கீழே வசிக்கும் மக்களின் பாதுகாப்பையும் முன்னிறுத்தி தமிழக அரசு மனப்பூர்வமாக ஏற்றது.
ஒப்பந்த மறுபரிசீலனை விஷயத்தை இரு மாநில முதல்வர்கள் மட்டத்தில் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறும் பரிந்துரைத்தது.
இதன்படி அணையை மூன்று வழிகளில் பலப்படுத்தத்துவங்கியது.
1.அவசர கால நடவடிக்கைகள்:
இதன் படி அணையில் கேபிள் ஆங்கரிங் முறையில் அணையின் தடுப்புச்சுவர்களின் இடையில் துவாரங்கள் அமைக்கப்பட்டு அணையின் மொத்த உயரத்திற்கும் ,நீளத்திற்கும் சிறு சிறு இடைவெளியில் அணையின் அடிப்பகுதியில் உள்ள பாறைகள் வரை கேபிள் ஆங்கரிங் செய்யப்பட்டு அந்தத் துளைகள் அனைத்தும் கான்க்ரீட் கலவைகளால் நிரப்பப்பட்டது.
2.இடைக்கால நடவடிக்கைகள்:
இதன்படி அணையின் தடுப்புச்சுவர்கள் மிகவும் உறுதியான வகையில் கான் க்ரீட் கலவைகளால் அணையின் மொத்த நீளத்திற்கும் கட்டப்பட்டது.அணையின் மேல்பகுதியில் கைபிடிச்சுவர்கள் அமைக்கப்பட்டன.
3.இறுதிக்கட்ட நடவடிக்கைகள் :
இதன்படி பேபி அணையைப் பலப்படுத்துதலும்,நீர் வெளியேற்றும் ஷட்டர்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு அணையின் நீர்வெளியேற்றும் திறன் வினாடிக்கு 1,25,000 கனஅடியாகவும் உயர்த்தப்பட்டது {அதற்கு முன் அணையின் நீர் வெளியேற்றும் திறன் வினாடிக்கு 85,000 கனஅடியாகத் தான் இருந்தது}
என்ற அளவில் அணையைப் பலப்படுத்தியது.
இதற்காகத் தமிழக அரசு ரூ 20 கோடி ஒதுக்கியது.இந்தப்பணிகள் 1981 ஆம் ஆண்டு தொடங்கி 1995 ஆம் ஆண்டுவரை நடைபெற்றது.
அணையின் நீர் வெளியேற்றுப்பகுதிகள்